×

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கணவர் முன்னிலையில் கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த கர்ப்பிணி வயிற்றில் ஆண் குழந்தை இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்ற போது விருத்தாசலம் அருகே கர்ப்பிணி தவறி விழுந்து மரணமடைந்தார். கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Vrudhachalam ,Kasthuri ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...